ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில் ---- சின்ன புறா Chinna Pura Lyrics in Tamil


சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

ஒருவன் இதயம் உருகும் நிலையில்
அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்
உறங்கா மனதை நீ காண்க
கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி
இன்று நாதங்கள் கேட்டாயோஓஓ
மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே
கேளம்மாஆஆஆஆ

சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில்

ஆஆஆஆ.. ஆஆஆஆ..ஆஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..ஆஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..ஆஆஆஆ..

மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்
மறந்தா இருக்கும் உன் வீணை
மடிமேல் தவழ்ந்தேன் மறுநாள் வரை நான்
மறவேன் மறவேன் உன் ஆணை
நீ இல்லையேல் இன்று நான் இல்லையே
எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா? அல்லது சோகங்களா?


சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே.ஏஏஏஏ
நூறாண்டுகள் நீ வாழ்கவே..ஏஏஏ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக