கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்
கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
{நெருப்பென்று சொன்னால்
நீரிலும் அணையும்
நீர் என்று சொன்னால்
நெருப்பிலும் வேகும்} (2)
நான் கொண்ட நெருப்பு
அணைக்கின்ற நெருப்பு
நான் கொண்ட நெருப்பு
அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ
இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்
கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
சேலைக்குள் ஆடும்
மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும்
மனம் எனும் ஞானி
ஞானியின் மனமும்
ஆசையில் தேனி
ஞானியின் மனமும்
ஆசையில் தேனி
நான் ஒரு ராணி
பெண்களில் ஞானி
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்
கோடையில் ஒரு நாள்
மழை வர கூடும்
கோயில் சிலைக்கும்
உயிர் வர கூடும்
{காலங்களாலே
காரியம் பிறக்கும்} (2)
காரியம் பிறந்தால்
காரணம் விளங்கும்
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்
கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக