திங்கள், 22 ஜனவரி, 2024

தெய்வம் தந்த வீடு பாடல் வரிகள்

 





தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு


இந்த ஊரென்ன சொந்த வீடென்ன
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன
ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன
வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன

நான் கேட்டு

தாய்தந்தை படைத்தாரா…..ஆஆ
ஆ…ஆ….ஆ….ஆஆஆ
நான் கேட்டு தாய்தந்தை படைத்தாரா
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு
இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன
அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு….

 வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்
உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன்
இதுதான் என் கட்சி

கொண்டதென்ன கொடுப்பதென்ன
இதில் தாய் என்ன
மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும்
அன்புத் தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன்
இதுதான் என் கட்சி

உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன
கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ


இலக்கணம் மாறுதோ

இலக்கியம் ஆனதோ

இதுவரை நடித்தது
அது என்ன வேடம்
இது என்ன பாடம்
இதுவரை நடித்தது
அது என்ன வேடம்
இது என்ன பாடம்

இலக்கணம் மாறுதோ
ஹோ ஹோ ஓ ஓஓ

கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான ராகம் ஏன் இந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ

இலக்கணம் மாறுதோ
ஹோ ஹோ ஓ ஓஓ

என் வாழ்க்கை நதியில்
கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
என் வாழ்க்கை நதியில்

கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்

புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ
விலக்கி வைப்பாயோ

தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுப் பாட ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்
மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை
உரைப்பது கீதை

மணி ஓசை என்ன இடி ஓசை என்ன
எது வந்த போதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனை காக்கக் கண்டேன்
நீ எது நான் எது ஏனிந்த சொந்தம்
பூர்வ ஜென்ம பந்தம்

ஹா..ஆஅஆஅ..ஹாஆஅ..
ஹாஆஅஹாஆஅ..
இலக்கணம் மாறுதோ
இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது
அது என்ன வேடம்
இது என்ன பாடம்

திரைப்படம்:. நிழல் நிஜமாகிறது
நடிப்பு:. கமல்ஹாசன், சுமித்ரா மற்றும் ஷோபா
பாடகர்: SP. பாலசுப்பிரமணியம்

இசை: M.S. விஷ்வநாதன்

பாடல் எழுதியவர்: கண்ணதாசன்

Junior Junior Junior இருமனம் கொண்ட திருமண வாழ்வில்


இருமனம் கொண்ட திருமண வாழ்வில்

இடையினில் நீயேன் மயங்குகிறாய்

இருமனம் கொண்ட திருமண வாழ்வில் 
இடையினில் நீயேன் மயங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகிறாய்
கரையினில் ஆடும் நாணலே (நாணல் ME ஹி ஹி ஹி)
கரையினில் ஆடும் நாணலே நீ
நதியிடம் சொந்தம் தேடுகிறாய்

சிற்பம் ஒன்று சிரிக்க கண்டு
இரப்பர் பொம்மை ஏக்கம் கொண்டு
காதல் கீதல் செய்யக்கூடாதோ
சின்னப்பையன் வயசோ கொஞ்சம்
பொம்மைக்கென்ன மனசா பஞ்சம்
ஒட்டிப்பார்த்தால் ஒன்றாய் சேராதோ
Junior Junior Junior

இருமனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா

Is it அபூர்வ ராகம்?

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
வயலுக்கு தேவை மேகம் என்பாய் 
அவளது தேவை அறிவாயோ
வயலுக்கு தேவை மேகம் என்பாய்
 அவளது தேவை அறிவாயோ
பாட்டை கண்டு ராகம் போட்டேன்
உயிரை கண்டு தாகம் கொண்டேன்
பாவம் கீவம் பார்க்க கூடாது

No it bad.  But I am mad
பாவப்பட்ட ஜென்மம் ஒன்று
ஊமை கேள்வி கேட்க்கும் போது
ஆசை மோசம் செய்யக்கூடாது ஹ ஹ ஹ ஹ
What கப கப கப ஹ Junior


Junior Junior Junior
இருமனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்

சித்திரை மாதம் மழையை தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலை தேடி ஓடுகின்றாய்
Boss love has no season or even reason.  Shut up
சித்திரை மாதம் மழையை தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலை தேடி ஓடுகின்றாய்
உதயத்தை காண மேற்கு நோக்கி 
ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாய்
உதயத்தை காண மேற்கு நோக்கி 
ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாய்
அடங்கியவனுக்கு ஐப்பசி மாசம்
ஏமாந்தவனோ April மாசம்
அடியேன் முடிவை சொல்லக்கூடாதோ 

It's highly idiotic.  No Boss only romantic ஹ ஹ ஹ ஹ
கொஞ்சும் பொம்மை பாடுது பாட்டு
குழம்பிய நெஞ்சம் சிரிக்குது கேட்டு
முடிவை சொல்லி சிரிக்ககூடாதோ ஹ ஹ ஹ ஹ
முடிவை சொல்லி சிரிக்ககூடாதோ

இருமனம் கொண்ட திருமண வாழ்வில் 
இடையினில் நீயேன் மயங்குகிறாய்

இசை:  எம். எஸ். விஷ்வநாதன்

பாடகர்:.  S. P. பாலசுப்பிரமணியம்

சனி, 5 பிப்ரவரி, 2022

வசந்த கால கோலங்கள் ---Lyrics in Tamil from Thyagam (1978)

 வசந்த கால கோலங்கள்


வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள்

அலையிலாடும் காகிதம்
ம்ம்.ம்.ம்ம்.ம்.ம்

அலையிலாடும் காகிதம்
அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள்
அவர்க்குமென்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று
அதில் இரண்டும் உண்டல்லவோ
கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்

தேரில் ஏறும் முன்னமே
தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம்
நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா
உன்னை மறக்க முடியுமா
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள்

 

Song Notes:

 

  • Song : Vasantha Kaala Kolangal
  • Movie/Album Name : Thyagam 1978
  • Star Cast : Sivaji Ganesan and Lakshmi
  • Singer : S. Janaki
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Kannadasan

 

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில் ---- சின்ன புறா Chinna Pura Lyrics in Tamil


சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

ஒருவன் இதயம் உருகும் நிலையில்
அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்
உறங்கா மனதை நீ காண்க
கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி
இன்று நாதங்கள் கேட்டாயோஓஓ
மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே
கேளம்மாஆஆஆஆ

சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில்

ஆஆஆஆ.. ஆஆஆஆ..ஆஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..ஆஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..ஆஆஆஆ..

மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்
மறந்தா இருக்கும் உன் வீணை
மடிமேல் தவழ்ந்தேன் மறுநாள் வரை நான்
மறவேன் மறவேன் உன் ஆணை
நீ இல்லையேல் இன்று நான் இல்லையே
எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா? அல்லது சோகங்களா?


சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே.ஏஏஏஏ
நூறாண்டுகள் நீ வாழ்கவே..ஏஏஏ

புதன், 11 ஆகஸ்ட், 2021

கண்ணிலே என்ன உண்டு......பாடல் வரிகள் தமிழில் (Kannilae Enna Undu) படம்: அவள் ஒரு தொடர்கதை பாடியவர்: S. ஜானகி


கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்

கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்

கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்

{நெருப்பென்று சொன்னால்
நீரிலும் அணையும்
நீர் என்று சொன்னால்
நெருப்பிலும் வேகும்} (2)

நான் கொண்ட நெருப்பு
அணைக்கின்ற நெருப்பு
நான் கொண்ட நெருப்பு
அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ
இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்

கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்

சேலைக்குள் ஆடும்
மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும்
மனம் எனும் ஞானி

ஞானியின் மனமும்
ஆசையில் தேனி
ஞானியின் மனமும்
ஆசையில் தேனி
நான் ஒரு ராணி
பெண்களில் ஞானி
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்

கோடையில் ஒரு நாள்
மழை வர கூடும்
கோயில் சிலைக்கும்
உயிர் வர கூடும்

{காலங்களாலே
காரியம் பிறக்கும்} (2)
காரியம் பிறந்தால்
காரணம் விளங்கும்
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்

கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்

கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்

வெள்ளி, 30 ஜூலை, 2021

சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில் - ANBE SANGEETHA


 

 ஆ.ஆ.ஆ..ஆ.ஆ.ஆ.
ஆ.ஆ.ஆ..ஆ.ஆ.ஆ.

சின்ன புறா ஒன்று
எண்ணக் கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

ஆஅ.ஆஅ.ஆஅ.ஆஅ.ஆஅஆ..

ஒருவன் இதயம் உருகும் நிலையில்
அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்
உறங்கா மனதை நீ காண்க
கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி
சிந்தும் நாதங்கள் கேட்டாயோ
மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே
கேளம்மா

சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில்

ஆ.ஆ.ஆ..ஆ.ஆ.ஆ.
ஆ.ஆ.ஆ..ஆ.ஆ.ஆ.

மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்
மறந்தா இருக்கும் பொன் வீணை
மடிமேல் தவழ்ந்தேன்
வரும் நாள் வரை நான்
மறவேன் மறவேன் உன் ஆணை
நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே
எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா இல்லை சோகங்களா
சொல்லம்மா.

சின்ன புறா ஒன்று
எண்ணக் கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே